TNPSC Thervupettagam

உலகப் பத்திரிக்கைச் சுதந்திர தினம் – மே 03 

May 6 , 2020 1606 days 425 0
  • இது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பறை சாட்டப்பட்டது.
  • மே 3 என்ற தினமானது விண்ட்ஹூக் பிரகடனத்தின் (Windhoek Declaration) நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இது 1991 ஆம் ஆண்டில் நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹூக்கில் ஆப்பிரிக்க செய்தித்தாள் பத்திரிக்கையாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமான   பத்திரிக்கைக்கான கொள்கைகளின் கூற்றாகும்.
  • யுனெஸ்கோ ஆனது யுனெஸ்கோ/கில்லிரிமோ கேனோ உலகப் பத்திரிக்கைச் சுதந்திரப் பரிசை வழங்குவதன் மூலம் இத்தினத்தை அனுசரிக்கின்றது.
  • இது உலகம் முழுவதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தின்  பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்காக தலைசிறந்த பங்களிப்புகளை ஆற்றிய தனிநபர்கள், அமைப்பு மற்றும்/அல்லது  நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “சாதகமும் பயமும் அற்ற பத்திரிக்கைத் துறை” என்பதாகும்.
  • 1993 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் உலகளாவியக் கருத்தரங்கானது நடத்தப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் கருத்தரங்கை நடத்தும் நாடு நெதர்லாந்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்